Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி :திருச்சி மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிரவன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதற்காக நெசவாளர் காலனி, ராசாம்பாளையம், கீழூர், இடையபட்டி, அய்யம்பாளையம், அண்ணா நகர், பாலக்காடு வடக்கு, பாலக்காடு தெற்கு, தோப்புக்கரணம் பண்ணை, நெடுங்குளம், அக்கரைப்பட்டி, தேவிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். அக்கோரிக்கையை ஏற்று வேட்பாளர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் ஆனதும் பகுதிகளில் குடிநீர் வசதி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில் பாதயாத்திரை பக்தர்கள் கான தனிப்பாதை, பாதாள சாக்கடை திட்டம், உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றி தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.
அப்போது மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருங்காடு ஊராட்சி பகுதியிலுள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த இளம் தலைமுறையினரிடம் சென்று தானும் மட்டை பந்தை பிடித்து கிரிக்கெட் விளையாடி இளைஞர்களிடம் வாக்குகள் சேகரித்தார். இதில் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கருணைராஜா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.